‛மாப்பிள்ளை' செந்தில் பாலாஜி.. Sorry.. Sorry.. சட்டசபையில் பேசிய அதிமுக எம்எல்ஏவால் சிரிப்பலை
சென்னை: தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து ‛மாப்பிள்ளை' என்று கூறி பேசியதோடு, அதன் பிறகு உடனடியாக Sorry Sorry என்று கேட்டதும் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டசபையில் நடந்த இந்த சுவாரசிய சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தமிழகத்துக்கான 2025-26ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தமிழக சட்டசபையில் நடந்து வருகிறது.
இன்று வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏ கருப்பண்ணன் எழுந்து பேசினார்.

அப்போது கருப்பண்ணன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‛மாப்பிள்ளை' என்று குறிப்பிட்டு கோரிக்கை வைத்தார். இதை கேட்டதும் அதிமுக எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். உடனே சுதாரித்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன் ‛‛Sorry'' என்று கேட்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
அதாவது கருப்பண்ணன் சட்டசபையில், ‛‛தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுகிறார்கள். அதில் மின்சாரத்துறை 100 கேவிக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. வெயில் கம்மியா இருக்கும் காலத்தில் அந்த மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால் 100 கேவி என்பதை 120 கேவி வரை அனுமதி கொடுத்தால் சவுகரியமாக இருக்கும். அதனால் மின்சாரத்துறைக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
மாப்பிள்ளைக்கு (மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி) தெரியும். Sorry Sorry.. அப்படி பேசி பேசி வாய் வந்திருச்சு. அவர்களுக்கு தெரியும். 100 கேவி என்பதை 110 கேவி, 120 கேவி என்று கொடுத்தால் சவுகரியமாக இருக்கும். அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்'' என்றார். இதை கேட்டவுடன் சபையில் இருந்த அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்தபடி எழுந்து பதிலளித்தார். செந்தில் பாலாஜி பேசும்போது, ‛‛தனியார் சேலார் பேனல் அமைப்பு குறித்தும், சேலார் பேனல் இணைப்பு குறித்தும் உறுப்பினர் எடுத்து கூறினார். மிக விரைவாக அவர்களுக்கான அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்துவது குறித்தும், அதிகாரிகளிடம் எடுத்து கூறி ஆவணம் செய்யப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications