லோக்சபா தேர்தல் நிலை மாறியாச்சு.. மக்கள் ஆதரவை மீண்டும் பெற்றுள்ளோம்: ஓபிஎஸ்-எடப்பாடி ஹேப்பி அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கு கடும் போட்டி கொடுத்து, 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்.

- மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்களின், அன்பு, ஆதரவை மீண்டும் பெற்றுள்ளது
- மக்களின் அன்பு, ஆதரவு அதிமுக மீண்டும் பெற்று வருகிறது என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டி உள்ளோம்
- மக்கள் பணிகளுக்கு கிடைத்த பரிசு என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம்
- இன்னும் சிறப்பாக பணியாற்றி அனைத்து தேர்தல்களிலும் முழுமையான வெற்றிகளை பெற உறுதி ஏற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications