அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம்.. எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்களை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி வெங்கடேஷ் பாபு, ஜான் தங்கம் ஆகியோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026 சட்டப் பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 நாட்களாக நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு 10 மாத காலமே உள்ள நிலையில் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/3N7kiBxv6e
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 27, 2025
இந்நிலையில், அ.தி.மு.க வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி வெங்கடேஷ் பாபு பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ்.பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடேஷ் பாபு அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜான் தங்கம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜான் தங்கம், அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications