மர்மம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் எங்கே? நடிகை சாந்தினி வழக்கில் உச்சகட்ட பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது.

சென்னையில் ஐந்து வருடகாலம் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்தோம் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மணிகண்டனால் கர்ப்பம் அடைந்து மூன்று முறை மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக அதிர்ச்சி தகவலை அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

தனிப்படை

தனிப்படை

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். கருக்கலைப்பு மாத்திரையை வாங்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டத்தில் என்று சாட்டிங் உரையாடலில் தெரிவிக்கப்பட்டு இருப்பதை போலீசில் சாந்தினி தெரிவித்திருந்தார். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

எங்கே இருக்கிறார்

எங்கே இருக்கிறார்

இப்படியாக பல தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மணிகண்டனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தொடர்பு கொள்ளும் போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தகவல் வருகிறது. சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் அவர் தலைமறைவாக இருக்கிறார். காவல்துறை விசாரணைக்கு அவர் இதுவரை ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Naadodigal Shanthini விவகாரம் | EX AIADMK Minister Manikandan பேச்சு | Oneindia Tamil
    கைது செய்ய தீவிரம்

    கைது செய்ய தீவிரம்

    மணிகண்டன் எங்கு இருக்கிறார் என்பது கண்டறியப்பட்டால் அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்த தேவை ஏற்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மணிகண்டன் எங்கே என்பது தெரியாததால் இந்த வழக்கில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அவர் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    குற்றச்சாட்டை மறுத்தார்

    குற்றச்சாட்டை மறுத்தார்

    நடிகை சாந்தினி தன்னிடம் பணம் பறிப்பதற்காக இவ்வாறு பொய் புகார் அளித்ததாக ஏற்கனவே மணிகண்டன் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் மணிகண்டன் மனைவி ஒரு புகார் அளித்து இருந்தார். அதில் சாந்தினியால் தங்கள் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் புகாரில் உண்மை இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இப்படியாக புகாரை மறுத்து வந்த நிலையில் காவல்துறையின் விசாரணைக்கு ஏன் அவர், ஆஜராகவில்லை என்பது இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+