சாலை மறியல் வழக்கில் ஜாமீன் பெற்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சென்னையில் 49-வது வார்டு வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக கூறப்பட்டது.

தாக்க சொன்ன ஜெயக்குமார்
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திமுக தொண்டர் ஒருவரைப் பிடித்து அரை நிர்வாணப்படுத்தி தாக்கினர். இத்தனையும் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஜெயக்குமார் கைது
இதனடிப்படையில் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது மகன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சாலை மறியல் கேஸில் ஜாமீன்
இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கனவே டிஸ்மிஸ் செய்துவிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

தாக்குதல் வழக்கில் ஜாமீன் கிடைக்குமா?
இதனிடையே திமுக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்தார். ஜெயக்குமாருக்கு ஜாமீன் தர மனுதாரர் நரேஷ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேநேரத்தில் காவல்துறை தரப்பில் தங்களிடம் மனு தரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த விவரங்களை கொடுக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர் நரேஷ் தங்களது ஆட்சேபனையை இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி?












Click it and Unblock the Notifications