சாலை மறியல் வழக்கில் ஜாமீன் பெற்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சென்னையில் 49-வது வார்டு வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக கூறப்பட்டது.

தாக்க சொன்ன ஜெயக்குமார்
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திமுக தொண்டர் ஒருவரைப் பிடித்து அரை நிர்வாணப்படுத்தி தாக்கினர். இத்தனையும் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஜெயக்குமார் கைது
இதனடிப்படையில் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது மகன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சாலை மறியல் கேஸில் ஜாமீன்
இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கனவே டிஸ்மிஸ் செய்துவிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

தாக்குதல் வழக்கில் ஜாமீன் கிடைக்குமா?
இதனிடையே திமுக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்தார். ஜெயக்குமாருக்கு ஜாமீன் தர மனுதாரர் நரேஷ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேநேரத்தில் காவல்துறை தரப்பில் தங்களிடம் மனு தரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த விவரங்களை கொடுக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர் நரேஷ் தங்களது ஆட்சேபனையை இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications