துள்ளி மகிழும் தாம்பரம்.. சென்னையில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையில் கவனிச்சீங்களா? சபாஷ் ஸ்டாலின்
சென்னை: தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு வீட்டு மனை பட்டாவையும் வழங்கினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி இயங்கி வரும், அரசு தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக, 2021 அக்டோபரில் அரசு அனுமதி அளித்திருந்தது.. இந்த மருத்துவமனை மேம்பாடுக்காக, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

இதற்காக தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு, கடந்த 2023ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுமே, கட்டுமான பணிகள் துரிதமாக ஆரம்பமாகின.. இப்பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், மருத்துவமனை கட்டிடம் திறப்புக்கு தயாராகிவிட்டது.
விறுவிறு கட்டிட பணிகள்
இந்த கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஏற்கனவே ஆய்வு செய்திருந்த நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்..
குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, புதிய மருத்துவமனை தற்போது கட்டப்பட்டு உள்ளது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை
இந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.7 கோடி மதிப்பில் புதிதாக பல் மருத்துவமனை மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது..
மருத்துவமனை, 400 படுக்கை வசதி, ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. சி.டி.,ஸ்கேன், குழந்தைகள் நலன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு, நீரிழிவு பிரிவு ஆகிய சிறப்பு வசதிகள் அமைய உள்ளன. முறையாக அனைத்து அனுமதிகளையும் பெற்றே இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
தாம்பரம் மருத்துவமனை
அதேபோல, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 213 படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த தாம்பரம் தாலுகா மருத்துவமனை, இப்போது 400 படுக்கைகளுடன் கூடிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
6 தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் 6 அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.இங்கு புறநோயாளிகள் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே, ஃப்ளோரோஸ்கோபி, அவசரகால அறுவை சிகிச்சை மையம், ரத்த வங்கி, டயாலிசிஸ் வார்டு, மகப்பேறு கட்டடம் ஆகியவையும் உள்ளன. மேலும் இந்த மருத்துவமனைக்கு அருகில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தனிமைப்படுத்துதல் கட்டடமும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார். பிறகு அவர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார். பின்னர், பல்லாவரத்தில் விமான நிலையம் அருகே கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவுக்கு சென்று 20 ஆயிரத்து 21 ஏழை எளியவர்களுக்கு ரூ.1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடம்" "கல்வியும் சுகாதாரமும் நமது தமிழ்நாட்டின் இரு கண்கள் காலிற்கு கீழ் நிலமும் தலைக்கு மேல் கூரையும் பலருக்கு கனவு, ஏழை மக்களுக்கு இலவச பட்டா என்பது பேருதவி 2021 முதல் தற்போது வரை சுமார் 17லட்சம் பேருக்கு பட்டா வழங்கி உள்ளோம்" என்றார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications