கடும் நெரிசல்.. சென்னை கிளாம்பாக்கத்தில் தவித்த பயணிகள்! பெருங்களத்தூர், வண்டலூரில் ஊர்ந்த வாகனங்கள்
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியதோடு போதிய பேருந்துகள் இல்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வேளையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் என்பது அரசு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் கடந்த 28 ம் தேதி முதல் இன்று வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட பல இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களில் டிக்கெட் விலை உச்சம் தொட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் மற்றும் அரசு பஸ்களில் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். நேற்று முன்தினத்தை ஒப்பிடும்போது நேற்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நள்ளிரவிலும் கூட அதிகமான மக்கள் சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் வந்தனர்.
இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. அதோடு பஸ்களில் நின்றபடியும், படிகளில் தொங்கியபடியும் பயணிகள் பயணம் செய்தனர். இந்த வேளையில் திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் இதுவரை 2.31 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்றும் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் பயணிக்க உள்ளனர். இதனால் சிறப்பு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை என்பது 3 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்தது. சிறப்பு பஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications