இருளில் தமிழகம்! இருமுறை பிரதமராகும் வாய்ப்பை இழந்த தமிழர்கள்.. அமித்ஷா சொன்ன அந்த இருவர் யார்?
சென்னை: தமிழகம் இருளில் இருக்கிறது என்பது நான் சென்னைக்கு வந்த போது மின்துண்டிப்பு ஏற்பட்டதிலிருந்தே தெரிகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமையும். நான் சென்னை விமான நிலாயம் வந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனது வருகையின் போது மின்சாரம் துண்டிப்பு தமிழகம் இருளில் இருப்பதையே காட்டுகிறது. தமிழகத்திற்கு பாஜக வெளிச்சம் தரும்.
மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பை திமுக இரு முறை இழந்துவிட்டது என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழர் பிரதமராகும் வாய்ப்பை திமுக இரு முறை இழந்துவிட்டதாக அமித்ஷா சொல்லும் நிலையில் அந்த இருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் அமித்ஷா சொல்வதையெல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. அவர் யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை.
எங்களுக்கு தெரிந்து பிரதமர் ரேஸில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இதில் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார். அப்போது அவர் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை வேண்டாம் என சொல்லிவிட்டு இந்திரா காந்தியை பிரதமராக்குமாறு கூறிவிட்டார். அதனால்தான் நாம் காமராஜரை கிங் மேக்கர் என அழைக்கிறோம்.
அது போல் 1990 களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது. லோக்சபா தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகள் கை ஓங்கிய காலம். அப்போது திமுக ஆதரித்தால் மூப்பனார் பிரதமராவார் என பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புக்கு அவருக்கு ஏனோ கிடைக்காமல் போய்விட்டது. எனவே இவர்கள் இருவரை வைத்துதான் அமித்ஷா பேசியிருக்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தார்கள்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications