மீண்டும் புத்துயிர் பெறும் அம்மா குடிநீர்... தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் நோக்கில் அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.
அனைத்து பேருந்துநிலையங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் திடீரென பெரும்பாலான பேருந்து நிலையங்களில் மூடப்பட்ட நிலையில், மீண்டும் புத்துயிர் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரூ.10-க்கு விற்பனை
அம்மா குடிநீர் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததுடன் அதனை அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தியும் காட்டினார். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 10 ரூபாய் என விலை நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட அம்மா குடிநீர் கேன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பேருந்துநிலையங்கள்
அம்மா குடிநீர் கேன்கள் பேருந்து நிலையங்களில் மட்டும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த திட்டம் சுணக்கம் கண்டது. மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான பேருந்துநிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை மையங்கள் மூடப்பட்டன.

அரசு நிதி ஒதுக்கீடு
இந்நிலையில், தமிழக அரசு இப்போது ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ரூபாய்க்கு சுத்திரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை தரமணியில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு லட்சம் கேன்கள்
அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள மதுரை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட 8 கோட்டங்களுக்குட்பட்ட அனைத்துப் பேருந்து நிலையங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு லட்சம் கேன்கள் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications