கட்சியாக மாறிய பின் முதல் சவால்.. 4 தொகுதி இடைத் தேர்தல்.. வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன்
Recommended Video
சென்னை: 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த மாதம் மரணமடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 தொகுதிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தாகிவிட்டது. இதைத் தொடர்ந்து தினகரனின் அமமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.
போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
1. திருப்பரங்குன்றம்- ஐ. மகேந்திரன்
2. சூலூர்- கே சுகுமார்
3. ஒட்டப்பிடாரம்- சுந்தரராஜ்
4. அரவக்குறிச்சி- பி.எம். ஷாகுல் அமீது












Click it and Unblock the Notifications