ஆஹா! இந்த பாட்டியோட கையெழுத்தை பாருங்க! அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம்! ஆனா தலையெழுத்து?
சென்னை: இந்த பாட்டியின் கையெழுத்தை பார்த்தீர்களா எத்தனை அழகாக இருக்கிறது? ஆனால் தலையெழுத்து?
கையெழுத்து நல்லா இருந்தாதான் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கு என்னதான் கையெழுத்து நன்றாக இருந்தும் தலையெழுத்து நன்றாக இருக்காது. கையெழுத்து நல்லா இருக்காவிட்டாலும் தலையெழுத்து நன்றாக இருக்கும்.

இப்படித்தான் மாறி மாறி இருக்கும். கையெழுத்தை வைத்துக் கூட ஒருவரை பற்றி அவருடைய குணாதிசயத்தை சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு கையெழுத்திற்கு என பவர் இருக்கிறது.
அது போல் ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து எதையுமே தீர்மானிக்க முடியாது என்பார்கள். அது சில இடங்களில் உண்மையாகிறது. உதாரணமாக பார்ப்பதற்கு படிக்காதவர்கள் போல் இருப்பார்கள், ஆனால் அவர்கள் வாயை திறந்தாலே ஆங்கிலம் சரளமாக வரும்.
அது போல் மகாபலிபுரத்தில் கூட ஊசி மணி பாசி மணி விற்கும் நரிக்குறவ இனத்தை சேர்ந்த ஒருவர் கேள்வி ஞானத்தை கொண்டே அத்தனை அழகாக ஆங்கிலம் பேசியதை நாம் பார்த்தோம். சாலையில் சுற்றி திரிந்த மூதாட்டி ஒருவர் பேசும் ஆங்கிலம் யாருக்கும் ஈடாகாது.
அந்த வகையில் ஒரு இடத்தில் சாலையோரத்தில் தங்கி வரும் மூதாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் அத்தனை அழகாக எழுதுகிறார். இதை யார் எழுதியிருப்பார்கள் என பார்த்தால் அவர் ஆதரவற்ற நிலையில் இருக்கும் மூதாட்டி என்பது தெரிகிறது. கையெழுத்தை கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கிறது. ஆனால் பாருங்க, அந்த பாட்டி நடுரோட்டில் வாழும் நிலையில் இருக்கிறது. அவர் கோலமாவில் போடுவதிலேயே கையெழுத்து இத்தனை அழகாக இருக்கிறது என்றால் பேனாவில் எழுதினால் எப்படி இருக்கும்.












Click it and Unblock the Notifications