எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக்
சென்னை: மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண லிப்ட் விவகாரம், இன்று நாடு தழுவிய அளவிலான மிகப்பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சனையாக வெடிக்கும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்னதான் நடந்தது? யாரிந்த பெண்?
பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

லிப்ட் கேட்ட பெண்
அந்தப் பெண் திடீரென முதியவரின் பைக்கை கை காட்டி நிறுத்தினார்.. தனக்குக் காலில் கடுமையான வலி இருப்பதாகவும், நடக்க முடியாமல் உள்ளதால், பைக்கில் லிப்ட் கிடைக்குமா? என்று பாவமாக கேட்டுள்ளார்..
உடனே இரக்கப்பட்டு அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிய முதியவர், அவரது வீட்டிலேயே கொண்டு போய் விட்டுள்ளார். அங்குதான் அந்தப் பெண் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.
தன்னுடைய வீடு வரை அழைத்து வந்து உதவியதற்கு நன்றி, வீட்டிற்குள் வந்து ஒரு கப் டீ குடித்து விட்டு போலாமே? என்று உபசரிப்பதுள்ளார்.. முதியவரும் அதை நம்பி வீட்டிற்குள் சென்று உட்கார்ந்துள்ளார்.. சிறிது நேரத்தில் அந்தப் பெண் முதியவரை உல்லாசத்திற்கு அழைத்து, ஆசை வலைக்குள் வீழ்த்தியுள்ளார். ஆனால், முதியவருக்குத் தெரியாமல் அங்கிருந்த ரகசியக் கேமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
தடுமாறிய தாத்தா
கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் ஒட்டுமொத்தமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, முதியவரைச் சுற்றி வளைத்தனர். "வீடியோவை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவோம், போலீசில் பாலியல் புகார் கொடுப்போம்" என்று மிரட்டி, அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடுமே என்று \ பயந்த முதியவர், முதற்கட்டமாகத் தன்னிடம் இருந்த 5,000 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால், அந்த கும்பல் விடாமல் டார்ச்சர் செய்யவே, தனது விவசாய நிலத்தையே விற்க துணிந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல், முதியவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
விவசாய நிலம் அடமானம்
விவசாயி கொடுத்த புகாரின் பேரில் களமிறங்கிய போலீஸார், பெண் உட்பட அந்த மோசடி கும்பலை அதிரடியாக கைது செய்தனர். அப்போதுதான், கதையே வேறு பாதையில் திரும்பியது. வழக்கமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு சிறையில் மெடிக்கல் செக்கப் செய்வார்கள்.. அந்த வகையில் அந்தப் பெண்ணுக்கும் வழக்கமான மெடிக்கல் செக்கப் செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாகவே அவர் இதற்காகச் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில் ஒரு லேப்டாப் சிக்கியது. அதைத் திறந்து பார்த்த போலீஸாருக்கு தூக்கிவாரிப்போட்டது.
லேப்டாப்பில் வீடியோக்கள்
அதில், அந்த எச்.ஐ.வி பாதித்த பெண்ணுடன் வெவ்வேறு ஆண்கள் உல்லாசமாக இருக்கும் 16 வீடியோக்கள் இருந்தன. அந்தப் பெண் மூலம் அந்த 16 நபர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று பரவியிருக்கலாம் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதால், வீடியோவில் உள்ள நபர்களைத் தேடிப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பும் தீவிர முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் இப்போது 25 லட்சத்திற்கும் அதிகமானோர் எச்.ஐ.வி பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 66,400 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எச்.ஐ.வி பாதித்த பெண் ஒருவர் திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்காகப் பலருக்கு இந்தத் தொற்றைப் பரப்பி வந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தைக் கடந்து நாடு முழுவதும் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது...!!!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications