சென்னை நிதி நிறுவன ஊழியர்.. ஒரே நாளில் 2 கோடி சம்பாத்தியம்.. வாழ்நாளில் மறக்க முடியாத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தினமும் ஏராளமான பணம் வசூலாகும். அப்படி வசூலாகும் பணத்தை சுருட்டி பணக்காரன் ஆக நினைத்துள்ளார் அங்கு வேலை செய்த ஊழியர் ஒருவர். அதற்காகவே அவர் செய்த வேலையால் தற்போது புழல் சிறையில் அவர் கம்பி எண்ணி வருகிறார். ஒரே நாளில் 2 கோடி வரை கொள்ளையடித்தவர் அதில் வெறும் 2 லட்சத்தை செலவு செய்தவர், மீதி உள்ள பணத்தை செலவு செய்யும் முன்பு பிடிபட்டுள்ளார்.

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் 29 வயதாகும் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பணம் வசூல் செய்யும் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். தினமும் வசூல் செய்யும் பணத்தை நிதி நிறுவனத்தில் செலுத்துவது வழக்கம். அந்த பணம், நிதி நிறுவனத்தின் மேல் மாடியில் உள்ள அறையில் இருக்கும் பீரோவில் பூட்டி வைக்கப்படுவதும் வழக்கம் ஆகும். பீரோவின் சாவி, நிதி நிறுவன அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள வரவேற்பு அறையில் தொங்கவிடப்படும்.

Chennai finance company employee earns 2 crore in a single day An unforgettable twist at end

இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள், பீரோவின் சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதற்குள் இருந்த ரூ.2 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் நிதி நிறுவனம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

நிதி நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தலையில் 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் ஒருவர், பீரோ சாவியை எடுத்துச்சென்று பீரோவை திறந்து, அதற்குள் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. 'ஹெல்மெட்' அணிந்த மர்ம நபர் யார்? என்பதை போலீசார் தீவிர விசாரித்து கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில் 'ஹெல்மெட்' அணிந்த கொள்ளையன், அதே நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்வது தெரியவந்தது. அவரது பெயர் கார்த்திகேயன் (33). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தை சேர்ந்தவர் என்பதும்,. சாவி இருக்கும் இடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு பணத்தை கொள்ளையடித்துள்ளார். கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

அவர் கொள்ளையடித்த பணத்தில் ரூ.2 லட்சத்தை செலவு செய்துவிட்டார். மீதி ரூ.1.98 கோடி அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த பணத்தை கொள்ளையடிக்க அவரது நண்பர்களான வாலாஜாபாத்தை சேர்ந்த வேலு (36), காஞ்சீபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகியோரும் துணை போனது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+