'12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டத்தை உருவாக்குங்க'.. தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கும் அன்புமணி ராமதாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். . இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆளுனர் உரையில் ஏமாற்றம்
ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பல சட்டப் பேரவை தொகுதிகளின் எல்லைகள் இரு மாவட்டங்களில் பரவிக் கிடப்பதால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு ஆளுனர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5-ந்தேதி ஆளுனர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஏன் நடவடிக்கை இல்லை?
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்; எல்லைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதி குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்
இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாக இருக்கும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் செய்யப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மொத்த மாவட்டங்கள் எத்தனை?
தமிழகத்தில் தற்போது மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. சங்கரன்கோவில், கோவில்பட்டி, பொன்னேரி, எடப்பாடி ஆகியவற்றை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications