அன்புமணி பயணத்திற்கு ராமதாஸால் வந்த சிக்கல்.. அனுமதி மறுப்பு? நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்புமணி ராமதாஸின் நடை பயணத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அன்புமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மக்​கள் உரிமை மீட்பு எனும் தலைப்​பில் பாமக தலை​வர் அன்​புமணி மேற்​கொள்​ளும் நடைபயணம் திருப்​போரூரில் நேற்று தொடங்​கியது.

Anbumani Ramadoss PMK Ramadoss

பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி ராம​தாஸ் இடையே​யான மோதல் தொடர்ந்து வரும் நிலை​யில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராம​தாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாகவும், 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்​புமணி ராமதாஸ் அறி​வித்திருந்தார். இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்​ப​தால் தடை விதிக்​கக்​கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் பாமக நிறுவனர் ராம​தாஸ் மனு அளித்​தார்.

எனினும் திட்​ட​மிட்​டபடி நடைபயணத்​துக்​கான 'உரிமை மீட்​க... தலை​முறை காக்க' என்ற இலச்​சினையை​யும், ' உரிமைப் பயணம் ' என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்​புமணி வெளி​யிட்​டார். இதன் தொடர்ச்​சி​யாக நேற்று திருப்​போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார். அப்​போது முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்​தி​விட்​டு, அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணி​வித்தார்.

இதையொட்டி நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய அன்புமணி, "ராமதாஸின் வழி​யில் அவரது கனவு​களை நிறைவேற்​றவே நடைபயணம் மேற்​கொள்​கிறேன். மக்​களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்​டுக்கு அனுப்​பும். 10 உரிமைகளை முன்​வைத்து நடைபயணம் மேற்​கொள்​கிறேன்.

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்​ஷீட் கொடுத்​து, ஆக்​ஷன் என்​றதும் முதல்வர் நடிக்​கிறார். பெண்​களுக்கு ரூ.1,000 கொடுத்​தால் உரிமை கிடைக்​கு​மா? அது டாஸ்​மாக்​குக்​குச் செல்​கிறது. வேளாண் துறை​யில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீத​மாக இருப்​பது வெட்கக்கே​டானது. சுயமரி​யாதை​யுடன் வாழ்​வதற்​கான சமூக நீதியை உரு​வாக்​கு​வோம்." என்றார்.

இதற்கிடையே அன்புமணியின் சுற்றுப்பயணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து, அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி ராமதாஸ், திட்டமிட்டபடி திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கியிருந்தாலும், காவல்துறையின் அனுமதி மறுப்பு மற்றும் தடை உத்தரவு காரணமாக, அவர் அடுத்தடுத்து செல்லும் இடங்களுக்கு தடை விதிக்கப்படும். இதனால் சட்டரீதியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.

அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+