வெளிவரும் பழைய சென்னை! மெரினா கடற்கரையில் தோன்றிய பழங்கால சிலை! ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னைக்கு ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே சோழர்கள், பல்லவர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்கள் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி, மயிலாப்பூர் வரை உள்ள கோயில்களே இதற்கு சாட்சி. இது தவிர ஏராளமான மண்டபங்கள், நினைவு தூண்கள் சென்னையின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் இதன் பழமையை மறைத்துவிட்டன.

இப்படி இருக்கையில்தான் சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பழங்காலத்தை சேர்ந்த சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தகவலை அறிந்து வந்த காவல்துறையினர் சிலையை கைப்பற்றி மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சிலை திருமாலின் உருவத்தை போன்று இருப்பதாக அதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக இதுபோல கடந்த 2022ம் ஆண்டும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இரண்டு சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை என்று அடையாளம் காணப்பட்டது. இரண்டாவது சிலை முருகன் உருவம் பொறித்ததாகும். இதனையடுத்து சிலைகளை மீட்ட காவல்துறையினர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications