நீட் பலிபீடம்.. நீட் கூட்டுத்துரோகம்.. அனிதாவுக்காக டுவிட்டரில் கொதித்த.. ஸ்டாலின்.. உதயநிதி
சென்னை: நீட் பலி பீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூக நீதிப் போராளி அனிதா.. என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் இந்த நீட் கூட்டுத்துரோகத்துக்கு தங்கை அனிதா பலியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர் அனிதா. மருத்துவ கனவை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அவருக்கு நீட் தேர்வுக்கு எதிராக தோல்வியே கிடைத்தது. இதனால் விரக்தி அடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் அவரால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு அப்போது கொண்டுவரப்பட நீட் தேர்வு காரணம் என்பதால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் அனிதா உயிரிழந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், "தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, நீட் பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!" என்று கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் "சுயநல அடிமைகள்-வஞ்சக சாடிஸ்ட்டுகள்-இடறிவிட்ட நீதி... இந்த நீட் கூட்டுத்துரோகத்துக்கு தங்கை அனிதா பலியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏழை, எளிய கிராமத்து மாணவ, மாணவிகளின் மருத்துவர் கனவை நசுக்கும் நீட் தேர்வுக்கு முடிவுகட்டுவோம் என நம் தங்கையின் இந்நினைவு நாளில் உறுதியேற்போம்!" என்று கூறியுள்ளார்.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications