சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயுத பூஜை..பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சொன்ன குட்நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லுரிகளுக்கு 4 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கியது. நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படும். முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியை போற்றி வணங்குகின்றனர்.

செய்யும் தொழிலையும் கல்வியையும் போற்றும் வகையில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வெற்றி தரும் நாளாக விஜய தசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து நிறுவனங்களிலும் விடுமுறை அறிவிப்பது வழக்கம்.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க </a><a href=" title="அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க " />அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை

சனிக்கிழமை 1ஆம் தேதி அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

5 நாட்கள் விடுமுறை

5 நாட்கள் விடுமுறை

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

சொந்த ஊர் பயணம்

சொந்த ஊர் பயணம்

பொறியியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தனியார், அரசு நிறுவனங்களின் பணியாற்றுபவர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் ஏராளமானோர் ஆயுதபூஜை விடுமுறைக்கு சோந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் ரயில்கள், பேருந்துகளில் செல்பவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Anna University has announced a Four day holiday for engineering colleges across Tamil Nadu on the occasion of Ayudha Poojai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X