Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது வங்கி ‘வால்ட்’ இல்ல.. ஊழல் பண மூட்டை.. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை.. அண்ணாமலை தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இந்தியா' கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மதுபான தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரூ.300 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Annamalai about 300 crore rupees seized by it raid in jharkhand

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக எஸ்.ஷிவ் கங்கா அண்ட் கம்பெனி கம்பெனி, பவுத் டிஸ்டிலரி பிரைவேட் லிமிடெட் மற்றும் ராணிசாத்தி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் புதன்கிழமை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திதிலாகரில் உள்ள தீபக் சாஹு மற்றும் சஞ்சய் சாஹு ஆகிய இரண்டு மதுபான முதலாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிறுவன உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 12 பேர் கொண்ட குழு தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், அலமாரிகளில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 Annamalai about 300 crore rupees seized by it raid in jharkhand

கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை பைகள் மற்றும் சாக்குகளை ஒரு பெரிய லாரியில் ஏற்றிய வருமான வரித்துறையினர் ஸ்டேட் வங்கியின் போலாங்கிர் கிளைக்கு கொண்டு வந்தனர். அங்கு 11 பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. இதில், சுமார் 300 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு, "நமது நாட்டு மக்கள் இதனைப் பார்க்க வேண்டும். நேர்மையாளர்களாக, நேர்மையின் முகமாக தங்களை காட்டிக் கொண்டு இத்தகைய தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து திருடப்பட்டது இந்த பணம். மக்களிடம் திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட இந்த பணம் மக்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும். இது மோடியின் வாக்குறுதி." எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்படும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இது ஒரு வங்கியுடைய பணப் பெட்டகம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான தீரஜ் சாகு என்பவர், ஊழல் செய்து முறைகேடாக குவித்துள்ள ரூபாய் 300 கோடி பண மூட்டை.

வருமான வரித்துறை சோதனையில் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும், ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் ஒத்துப் போவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+