டெல்லி பிளான் கேன்சல்.. சென்னைக்கு செல்லும் அண்ணாமலை.. பாதயாத்திரைக்கு 2 நாட்கள் ரெஸ்ட்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜேபி நட்டா அழைப்பின் பேரில் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‛என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவர் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு வரை இந்த பாதயாத்திரை தொடரும் நிலையில், இடையிடையே மற்ற பணிகளிலும், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்பார் அண்ணாமலை.
இத்தகைய சூழலில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. மதுரையில் பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், அதை முடித்துக்கொண்டு டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.
பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், "நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்" என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சை அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலையை விமர்சனம் செய்தார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. அவர் இன்னும் வளர வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தனர். இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அண்ணாமலை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு சென்னை செல்கிறார் அண்ணாமலை. அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம்












Click it and Unblock the Notifications