Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுதமி இன்று கூட என்னை போனில் தொடர்பு கொண்டாரே.. நில அபகரிப்பு புகார் என்னாச்சு? அண்ணாமலை கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கவுதமியின் சொத்து அபகரிப்பு புகாருக்கு அவர் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: நடிகை கவுதமி தொலைபேசி வாயிலாக அவ்வப்போது என்னை தொடர்பு கொள்வார். இன்றும் அவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். கவுதமியின் சொத்து அபகரிப்பு புகாருக்கு காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை

Annamalai says that his party will help Gautami

கவுதமி கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார். கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். பிரதமர் மோடி இந்தியாவுக்கு செய்த வளர்ச்சி பணிகளை மேடைக்கு மேடை பேசி வருவார்.

அவருக்கு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் 8.16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை பாஜகவை சேர்ந்த அழகப்பன் என்பவர் அறிவுறுத்தலின் பேரில் தொழிலதிபர்கள் ரகுநாதன் , பலராமன் ஆகியோருக்கு பொது அதிகார ஆவணத்தை எழுதிக் கொடுத்தார். அதன்படி அந்த சொத்தை அவர்கள் இருவரும் நல்லவிலைக்கு விற்று அந்த தொகையை கவுதமியிடம் கொடுத்துவிட வேண்டும்.

ஆனால் அவர்களோ ரூ 25 கோடி மதிப்பிலான சொத்தை வெறும் ரூ 11 கோடிக்கு விற்றுள்ளனர். அந்த 11 கோடி ரூபாயை கவுதமியிடம் முழுவதுமாக கொடுக்காமல் நிலத்தில் பிரச்சினை இருப்பதால் ரூ 4.10 கோடிக்கு மட்டும்தான் விலை போகும். இப்போதே விற்றுவிடுவது நல்லது. காலம் போக போக பிரச்சினையால் மதிப்பு குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

இதனால் கவுதமியிடம் ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவர்கள் இருவரும் ரூ 4.10 கோடியை இரு தவணைகளாக கொடுத்தனர். இந்த நிலையில் கவுதமிக்கு வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் ரூ 2 கோடி வரி செலுத்தவில்லை என வந்ததும் கவுதமி அலர்ட் ஆனார்.

உடனே சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போய் தனது சொத்து குறித்து விவரங்களை கேட்ட போதுதான் ரூ 11 கோடிக்கு அந்த சொத்து விற்பனையானது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுதமி கடந்த செப்டம்பர் மாதம் அழகப்பன் உள்ளிட்டோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+