விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து!
சென்னை: என்னை பொறுத்தவரை டீ-யையும் காபியை ஒன்றாக கலக்க முடியாது.. அதுபோல் தவெக மற்றும் பாஜக கூட்டணி அமையாது என்று பாஜக நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு கூறிய அண்ணாமலை, விஜய்யுடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே என்டிஏ கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் 50 தொகுதிகள் வரை கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவி விஜய்க்கு அளிப்பதாகவும் பேச்சுவார்த்தை நட்பபதாக சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியாகவும், சொந்த வாழ்க்கையிலும் விஜய் பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ள போதும், இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணைய தயாராக இல்லை. இதனால் என்டிஏ கூட்டணியில் இணைந்தால் தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக வளர முடியும் என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், விஜய்யை பொறுத்தவரை ஏற்கனவே சொல்லிவிட்டோம். விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார். டீயும், காபியும் கலக்காது என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். ஏனென்றால் இரு கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு..
என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திருச்சியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. ஏற்கனவே மதுராந்தகம், மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் என்டிஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக அமையும்.
அதேபோல் வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக விவாதம் நடக்கும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக நிச்சயமாக விவாதம் நடக்கும். அதேபோல் சிலிண்டரை பொறுத்தவரை பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. ஈரான் போரை தொடங்கிய பின் ஹார்முஸ் நீரணை வழிப்பாதையை மூடிவிட்டது.
இதனால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பெட்ரோலியம் பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், சிலிண்டர் எரிவாயு அதிகமாக சவுதியில் இருந்தே வருகிறது. ஹோட்டல்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசியலும் இல்லை. அவர்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக அசாதாரணமான சூழல் தான்.
இப்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். விரைவாக இது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். 60% பெட்ரோலியம் பொருட்கள் இறக்குமதி செய்து வருகிறோம். அதனால் விரைவில் போர் சூழல் இயல்புக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!











Click it and Unblock the Notifications