முடிஞ்சத பார்.. கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வன்மத்தோடு அலைந்தவர் அண்ணாமலை.. அதிமுக பகீர்!
சென்னை: கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வன்மத்தோடு அண்ணாமலை சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், அண்ணாமலையின் நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது என ராஜ் சத்யன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில் அதிமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்கள் தடித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, பாஜகவை தாக்கி பேச, அதற்கு அண்ணாமலை நரி கதை சொல்லி பதில் கொடுக்க, அவருக்கு அதிமுக தலைவர்கள் எதிர் வினை ஆற்ற என களம் பரபரக்கிறது.

இந்நிலையில், கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் அண்ணாமலை சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும் என அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூட்டணியில் இருந்தபோதே அஇஅதிமுக என்னும் பெருங்கழகத்தை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள் சுற்றித் திரிந்தது எங்களுக்கு தெரியும். மக்களுக்கும், எங்கள் தொண்டர்களுக்கும் தோல்வி பயத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டி உள்ளீர்கள். திமுக இருந்தால் கூட பரவாயில்லை, அஇஅதிமுக அழியவேண்டும் என்று பொருள் பட பேசுகிறீர்கள்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. நன்றி! இது தான் எங்களுக்கான Fuel. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் பெருங்கனவை நெஞ்சில் ஏந்திச் செல்லும் எங்களை, உங்களைப் போன்ற குள்ளநரி கூட்டத்தால் அசைத்துக் கூட பார்க்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு திமுக மட்டும் எதிரியல்ல. பிரிவினைவாதம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு அரசியல் செய்யும் உங்களை போன்ற அற்ப புத்தி கொண்ட கட்சிகளும் தான்! இப்படிப்பட்ட தீயசக்திகள் தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுக எனும் இயக்கம் கண்டனர். இன்று உங்களை எதிர்க்கும் இந்த பாதை பெரியாரின் பாதை- அண்ணாவின் பாதை- எம்ஜிஆரின் பாதை- ஜெயலலிதாவின் பாதை.
இது தமிழ்நாடு! எங்க நாடு! என் தாத்தன்- பூட்டன் இருந்து பார்த்து கட்டுன எங்க வீடு. எங்கிருந்தோ வந்த கரையான்களை இதை நாசமாக்க விடுவோமா? கொரோனாவில் இருந்து எங்கள் மக்களைப் பாதுகாத்த எங்கள் தலைவருக்கு, உங்களிடம் இருந்தும் மக்களை காப்பாற்றத் தெரியும் முடிஞ்சதைப் பார்.. ஆண்டவனே எங்க பக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications