'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'We the Leaders' (நம்ம இயக்கம்) என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இயக்கம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் அண்ணாமலை. பாஜகவிலிருந்து விலகிய அவர், 'We the Leaders' (நம்ம இயக்கம்) என்ற புதிய இயக்கத்தை அறிமுகப்படுத்தி, எதிர்கால தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசினார்.

Annamalai TamilNadu Politics Politics

அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் இணைந்து தமிழ்நாடு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்தில் இணைந்தேனோ அதே இடத்தில் மரியாதையோடு சொல்லிவிட்டு தமிழர் பண்போடு வெளியேறியுள்ளேன். புதிய பாதை, புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளோம். எனது அரசியல் பாதை நீண்ட நெடியது. சாதாரணமாக வந்துவிடவில்லை.

லக்னோவில் நான் படிக்கும்போது 2009 இல் தேமுதிகவில் விஜயகாந்த்திடம் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் செய்தேன். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவில் 6 ஆண்டுகள் பயணித்தேன். 2020 ஆகஸ்ட் 24 அன்று பாஜகவில் இணையும்போது ரஜினிகாந்த் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது, அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அப்போது என் கண்முன் இருந்தது அவர் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால், கொரோனா காலத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது என நினைத்தேன்.

பாஜகவில் இணைவேன் என்ற வாக்குறுதியை மீறக் கூடாது என அப்போது நினைத்தேன். பின்னர், ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டேன். யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறுகிறேன். பாஜகவில் பயணித்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளத்தையும் கலாசார பாரம்பரியத்தையும் விட்டுக் கொடுத்ததில்லை.

நான் பெருமைமிகு இந்தியன், பாரம்பரியத் தமிழன். தனித்து தேர்தலை சந்திக்க கட்சித தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். மேக்கேதாட்டு பிரச்சனையின்போது, கர்நாடகத்தில் ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினேன். பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துள்ளேன். கடந்த 18 மாதங்களாக எனக்கு இருக்கு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறேன்.

டிசம்பர் 4 ஆம் தேதி 2025 இல் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். ஆனால், தேர்தலை முடித்துவிட்டு முடிவெடுக்க சொன்னார்கள். அதேபோல், கடைசி வரை தேர்தல் களத்தில் பணியாற்றினேன். ஆனந்தத்தோடு தமிழ்நாட்டில் புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளோம். அடுத்த பொதுத் தேர்தலில் நமது கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்றார்.

நம்ம இயக்கம் (We the Leaders) என்ற தனது இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கையையும் அண்ணாமலை தொடங்கினார். அண்ணாமலை இயக்கத்தில் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். அவர் பேசத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துளளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+