மெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமான மதுரை கலைச்செல்வி.. செக்ஸ் தகராறில் கொலை என தகவல்
பெண் கொலை சம்பந்தமாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நிர்வாண நிலையில் பீச்சில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றியும் இன்னும் கொலையாளி பிடிபடவே இல்லை. ஆனால் செக்ஸ் தகறாரில்தான் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பீச்சில் நீச்சல் குளம் பின்பக்கத்தில் 2 நாய்கள் சண்டையிட்டும், குறிப்பிட்ட இடத்தில் பள்ளத்தை நோண்டியபடியும் இருந்ததால் அந்த பக்கமாக வாக்கிங் போனவர்கள் அருகில் சென்று பார்த்தார்கள்.
[எஸ்.ஐ-யை அறைக்குள் பூட்டிவிட்டு தப்பி ஓடிய வட மாநில கொள்ளையர்கள்.. விரட்டி பிடித்த போலீஸார்!]

மூக்கில் ரத்தம்
அங்கே ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து உடல் மீது பாதி மணலை போட்டு மூடி இருந்ததும் தெரியவந்தது. மேலும் பெண்ணின் முகமெல்லாம் காயங்களும், மூக்கில் இருந்து ரத்தமுமாய் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்கள் உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்க அவர்களும் விரைந்து வந்தனர்.

மதுரை கலைச்செல்வி
பெண்ணின் சடலத்தை வெளியே எடுத்து பார்த்தால், அவர் நிர்வாண நிலையில் கிடந்துள்ளார். கழுத்து, மார்பு பகுதிகளில் படுகாயங்கள் இருந்துள்ளன. அருகில் ஆண் செருப்புகளும், மதுபாட்டில்களும், பெண்ணின் செல்போனும் இருந்தன. இதையடுத்து விசாரணையை தீவிரமாக துவக்கினர். கொலை செய்யப்பட்ட பெண், 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் பெயர் கலைச்செல்வி என்பதும், சொந்த ஊர் மதுரை என்பதும் தெரியவந்தது.

பாலியல் தொழில்
இவர் பாலியல் தொழில் செய்பவராம். அடிக்கடி மதுரையிலிருந்து சென்னைக்கு வருவாராம். எப்பவுமே பீச்சில் சுற்றிக் கொண்டே இருப்பாராம். இவருக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு கலைச்செல்வி சென்னை வந்து 2 மாதமாகிறதாம். சென்னை வரும்போதெல்லாம் பிரேம்குமார் என்ற ஆட்டோ டிரைவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

பிரேம்குமார்
சம்பவத்தன்றும் இப்படித்தான் அவரிடம் பேசியிருக்கிறார். அதனால் அந்த ஆட்டோ டிரைவரையும், அவருடைய நண்பர்கள் இன்னும் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செக்ஸ் தகராறில்தான் கலைச்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணை தொய்வு
ஆனாலும் கொலையை செய்தது பிரேம்குமாரும் அவரது நண்பர்களும்தானா என்பதை உறுதியாக போலீசாரால் சொல்ல முடியவில்லை. கொலை நடந்து 3 நாள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையே உள்ளது. இப்படி விசாரணையின் தொய்வுக்கு முக்கிய காரணம், கொலை செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி காமிராவே இல்லை என கூறப்படுகிறது. அதனால் அந்த பெண்ணின் பழைய மாடல் செல்போன் நம்பர்களை வைத்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

விரைவில் பிடித்து விடுவோம்
மேலும் இரவு மற்றும் விடிகாலை நேரங்களில் லைட் வெளிச்சமும் மங்கலாகவே இருப்பதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் இதை தங்களுக்கு ஈசியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். எனினும் இந்த கலைச்செல்வியை கொன்றவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

போலீசார் பற்றாக்குறையா?
மெரினாவில் சமீக காலமாகவே போலீசாரின் பற்றாக்குறை குறைவாக இருப்பதாகவும், சமூக விரோதிகளின் அட்டகாசம் பெருகி இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இங்கு பெருமளவு நடமாடுவதாகவும், கொள்ளை, மது அருந்துதல், உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைககளை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல திருநங்கைகள் உள்ளிட்ட பெண்கள் சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications