Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒர்க் ஃப்ரம் ஹோம்வாசிகளின் கவனத்திற்கு! சென்னையில் மின்வெட்டு.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சார தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் தொட்ட வெயில் ஏப்ரலில் கொழுந்துவிட்டு எரிந்தது. வழக்கமாக வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி போன்றவற்றில்தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஈரோடு, கோவை என கொங்கு மாவட்டங்களையும் வெயில் பதம் பார்த்தது.

Announcement that electricity will be cut in some places in Chennai today due to maintenance work

தமிழகத்தில் அதிகபட்சம் வெளில் பதிவான மாவட்டங்களில் ஈரோடுதான் முதல் இடத்தில் இருந்தது. வெயில் காரணமாக பலரும் ஏசி, ஏர் கூலர் நோக்கி நகர தொடங்கினர். இதனால் தமிழகத்தின் மின் தேவை உச்சத்தை தொட்டது. தேசிய அளவில் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவு மின் தேவை ஏற்பட்டது.

மே 2ம் தேதி 20,830 மெகாவாட் அளவுக்கு தமிழகத்தின் மின் தேவை இருந்தது. மே முதல் வாரத்தில், தமிழகத்தின் மாலை நேர மின் தேவை 18,000 மெகாவாட் - 18,958 மெகாவாட் வரை உயர்ந்தது.

ஆனால் தற்போது கோடை மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை உருவாகியுள்ளது. எனவே, மாநிலத்தின் மின் தேவை 20% வரை குறைந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழகத்தின் மாலைநேர மின் தேவை 15,878 மெகாவாட்டாக இருந்தது. இது மே 17 அன்று 15,487 மெகாவாட்டாகக் குறைந்தது. மே 18 அன்று மின் தேவை 15,555 மெகாவாட்டாக இருந்தது, இதுவே மே 19 அன்று 13,663 மெகாவாட்டாகக் குறைந்தது.

இப்படி இருக்கையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரியில் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+