ஒர்க் ஃப்ரம் ஹோம்வாசிகளின் கவனத்திற்கு! சென்னையில் மின்வெட்டு.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கானு பாருங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சார தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் தொட்ட வெயில் ஏப்ரலில் கொழுந்துவிட்டு எரிந்தது. வழக்கமாக வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி போன்றவற்றில்தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஈரோடு, கோவை என கொங்கு மாவட்டங்களையும் வெயில் பதம் பார்த்தது.

தமிழகத்தில் அதிகபட்சம் வெளில் பதிவான மாவட்டங்களில் ஈரோடுதான் முதல் இடத்தில் இருந்தது. வெயில் காரணமாக பலரும் ஏசி, ஏர் கூலர் நோக்கி நகர தொடங்கினர். இதனால் தமிழகத்தின் மின் தேவை உச்சத்தை தொட்டது. தேசிய அளவில் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவு மின் தேவை ஏற்பட்டது.
மே 2ம் தேதி 20,830 மெகாவாட் அளவுக்கு தமிழகத்தின் மின் தேவை இருந்தது. மே முதல் வாரத்தில், தமிழகத்தின் மாலை நேர மின் தேவை 18,000 மெகாவாட் - 18,958 மெகாவாட் வரை உயர்ந்தது.
ஆனால் தற்போது கோடை மழை காரணமாக குளிர்ச்சியான வானிலை உருவாகியுள்ளது. எனவே, மாநிலத்தின் மின் தேவை 20% வரை குறைந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழகத்தின் மாலைநேர மின் தேவை 15,878 மெகாவாட்டாக இருந்தது. இது மே 17 அன்று 15,487 மெகாவாட்டாகக் குறைந்தது. மே 18 அன்று மின் தேவை 15,555 மெகாவாட்டாக இருந்தது, இதுவே மே 19 அன்று 13,663 மெகாவாட்டாகக் குறைந்தது.
இப்படி இருக்கையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரியில் டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications