Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்ல கவர்ச்சி.. அப்பறம் ஆபாசம்.. இப்போ சாதி.. ரவுடிபேபி சூர்யா பேசின பேச்சு.. வெடித்தது பிரச்சனை

ரவுடிபேபி சூர்யா மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புகார் மேல் புகார் குவிந்து கொண்டிருக்கிறது சூர்யா மீது.. ஒருகுறிப்பிட்ட சாதியை பொதுவெளியில் அவதூறாக பேசிவிட்டாராம் ரவுடிபேபி சூர்யா.. இன்னொரு புகார் மதுரை கமிஷனர் ஆபீசுக்கு பறந்துள்ளது.

டிக்டாக் ஒழிந்ததே என்று பார்த்தால், அதன்மூலம் ஃபேமஸ் ஆனவர்கள் ஃபேஸ்புக்கிலும் யூடியூபிலும் அக்கவுண்ட் ஆரம்பித்து அலப்பறையை தந்து வருகின்றனர்..

அதில் முக்கியமானவர்கள் ஜிபி முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், திவ்யா போன்றோர். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், தளம் தான் மாறியுள்ளதே தவிர, இவர்களின் குணம் மாறவே இல்லை..

கவர்ச்சி

கவர்ச்சி

அதே ஆபாசம்.. அதே கவர்ச்சி.. அதே அசிங்கமான பேச்சு என அதிகரித்தபடியே உள்ளது.. இவர்களின் கவர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, ஆபாசமாக பேசுவது அதிகரிக்க அதிகரிக்க, லைக்ஸ்களும் அதிகரிக்கும்... இவர்களின் ஆபாச பேச்சை, வேலையில்லாமல் உட்கார்ந்து கேட்பதற்கென்றே ஒரு குரூப் உள்ளது.. இவர்களின் லைக்ஸ்களை வாங்குவதற்காகவே, இன்று பொதுமக்கள் வாயில் வறுபடும் நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. கடைசியில் இந்த பஞ்சாயத்து முதல்வர் ஸ்டாலின் வரை சென்றுள்ளது.

குடும்பம்

குடும்பம்

அதாவது, தங்களுக்குள் நடக்கும் சமாச்சாரங்களை பொதுவெளியில் விவாதித்து, இந்த விவகாரத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல், பொதுமக்களை சப்போர்ட்டுக்கு அழைத்து ஆறுதல் தேடும் போக்கும், தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கும் போக்கும் தொடர்ந்து நடந்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில் பப்ஜி மதன் கைதாகவும்தான், இவர்கள் எல்லாம் மட்டும் ஒழுங்கா, முகம் சுளிக்கும் வகையில் வீடியோக்களை போட்டு வருகிறார்களே, இவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று ராமநாதபுரம் எஸ்பி வரை புகார் பறந்தது.

Recommended Video

    GP Muthu,Rowdy Baby Surya உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக CM Cell-ல் புகார் | Oneindia Tamil
    இயக்கம்

    இயக்கம்

    இதன்மீது விசாரணை நடக்க உள்ள நிலையில், இன்னொரு புகார் சூர்யா மீது எழுந்தது.. குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கத்தின் சார்பாக இந்த புகார் தரப்பட்டுள்ளது.. அந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விடுதலை நேயன், மதுரை கமிஷனர் ஆபீசில் தந்துள்ள புகாரில், "ரவுடி பேபி சூர்யா என்கிறவர் பொது சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி அவதூறாக தொடர்ந்து பேசிவருகிறார்.

    சாதி

    சாதி

    எங்களின் சாதிப்பெயரை சொல்லி பொது சமூக வலைத்தளத்தில் எங்களை அவமானம் செய்துள்ளதால் பொதுவெளியில் எங்கள் சாதி மக்கள் மீது தவறான பார்வையும் சாதிரீதியான கேளிக்கை பார்வையும் ஏற்பட்டு வருகிறது.. அதனால் நான் ஒரு சிலரால் கேலிக்கும் உள்ளானேன். அதனால் 'சூர்யா ரவுடிபேபி 22' என்கிற யூடியூப் சேனலை தடை செய்தும் ரவுடி பேபி சூர்யா என்கிற பெண்மணி மீது தகுந்த சட்ட மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+