திமுக அமைச்சர்கள் 2 பேர் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் துரைமுருகனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகனுக்கு வயது மூப்பின் காரணமாக, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால், அவர் மருத்துவமனை சென்று அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால், கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் இருந்த நிலையிலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications