"வாட்ஸ் அப்பில் சாட்டிங்.. தொல்லை கொடுத்தார்" பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் புகார்
சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பெனடிக் ஆன்றோ இளம்பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடந்த சில வாரங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதுமாக இருந்தது.

பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூர் என பல இடங்களுக்கு சென்று வந்ததும் அங்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தியதும் அவர்களையும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீது அளித்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானர். அவரை தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை கைது செய்தனர். பாளையங்க்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 2022 ஆம் ஆண்டு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் வாட்ஸ் அப் மூலம் சாட்டிங் செய்தேன். ஆனால், அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதனால், நான் சாட்டிங் எதுவும் செய்யாமல் ஒதுங்கி கொண்டேன். எனினும் எனக்கு தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தொல்லை கொடுத்து வந்தார்" என்று கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications