Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..10 இடங்களில் ரெய்டுக்கு காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில்,தமிழ்நாட்டில் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய மலர்விழி, 2015-17 ஆம் ஆண்டு சிவகங்கை கலெக்டராக இருந்தார். மலர்விழி 2001ல் குரூப்-1 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு சென்னையில் வணிகவரித் துறையில் இணை ஆணையராக பணியாற்றினார், அவருக்கு ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Anti-bribery raid at the residence of IAS officer Malarvizhi, District Development Officer at Paprirettipatti

2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் மலர்விழி ஐ.ஏ.எஸ். தற்போது, சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்தது. ரூ.40 மதிப்புள்ள ரசீது புத்தகத்தை ரூ.135க்கு வாங்கியதில் மொத்தம் ரூபாய் 1.32 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் ஆட்சியர் மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள தாய்சா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி இரண்டு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ரூ.1.32 கோடி கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னை, புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கிருஷ்ணன் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

கிரசண்ட் நிறுவன உரிமையாளர் தாகீர் உசேன், நாகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீரையா, பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+