Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழிலகம் நீர்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. ரூ.2 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் அலுவலகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவு உதவி செயற்பொறியாளரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விடிய விடிய சோதனை நடத்தினர். ரூ. 2லட்சம் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் உதவி செயற்பொறியாளரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறைகளுக்கு சொந்தமான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் உதவி செயற்பொறியாளராக பாஸ்கரன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஒப்பந்ததாரரின் பதிவுகளை புதுப்பிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக பாஸ்கரன் மீது புகார் எழுந்தது.

Anti-corruption department raids in Ezhilagam assistant executive engineer office

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் நேற்றிரவு எழிலகம் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக பாஸ்கரன் அறைக்குள் நுழைந்தனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாஸ்கரனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+