நள்ளிரவு நேரம்.. கடவுளாய் வந்த காக்கிச் சட்டை... கர்ப்பிணியை காத்த காவலருக்கு குவியும் பாராட்டு
சென்னை: சென்னை நம்மாழ்வார்பேட்டையில் பிரசவ வலியிலும் உதவிக்கு எவரும் இன்றியும் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று காத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் காவலர்கள், செல்வராஜ், ராஜசேகர் ஆகியோர் நள்ளிரவு 2.30 மணியளவில் காவல் வாகனத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது நம்மாழ்வார்பேட்டையில் உள்ள கே.எச் சாலை அருகே சாலையோரமாக தவிப்புடனும், கண்ணீருடனும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பெண்ணின் அருகே வாகனத்தை நிறுத்தி அவர்கள் விசாரித்தனர்.

பிரசவ வலி
அப்போது அந்தப் பெண் தனது மகளுக்கு தலைப் பிரசவம் என்றும், அவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உதவிக்கு வரவில்லை
ஆனால், நள்ளிரவு நேரத்தில் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களால் விரைந்து வரமுடியவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர் கர்ப்பிணிப் பெண்ணான ஷீலாவை (30) காவல் துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று 108 ஆம்புலன்ஸ் வாகனம் நின்ற இடத்தில் சேர்த்தனர்.

நன்றியும், பாராட்டும்
அதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அதிகாலை 3.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. உரிய நேரத்தில் உதவி செய்த போலீசாருக்கு அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீருடன் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு











Click it and Unblock the Notifications