ஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ்
கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு பதிலாக அப்சரா ரெட்டி நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
Recommended Video

சென்னை: ட்விட்டரில் தம்பிதுரையுடன் போட்ட சண்டையெல்லாம் வீணாகி விடும் போல இருக்கே என்று காங்கிரசின் ஜோதிமணி புலம்ப ஆரம்பித்துள்ளாராம்.
கரூர் தொகுதியில் திமுக-காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிட உள்ளார்.
பாஜகவுக்கு எவ்வளவு எதிராக பேசினாரோ, அவ்வளவும் பேசிவிட்டு, திருப்பதி ஏழுமலையானிடம் போய் (பியூஸ் கோயலுடன்) பேசியதெல்லாம் தப்பு.. தப்பு.. என்று சொல்லிவிட்டு, திரும்பவும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு டபுள் ஓகே சொல்லிவிட்டார். விளைவு.. மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

உள்ளடி வேலை
இவரை எதிர்த்து களம் காணபோவது காங்கிரசின் ஜோதிமணி என்று சொல்லப்பட்டது. இதற்கு காரணம் இருவரும் ஒரே சமூகம்.. எப்போதும் ஏழாம் பொருத்தம்.. ராகுலுடன் நன்மதிப்பை பெற்றவர் ஜோதிமணி என்பதால்தான். ஆனால் ஜோதிமணிக்கு எப்படி சீட் தரலாம் என்று காங்கிரசுக்குள் எதிர்ப்பு கிளம்பியதுடன் உள்ளடி வேலைகளும் நடக்க ஆரம்பித்தது.

சென்டிமென்ட்
இப்போது ஹைலைட் சமாச்சாரம் என்னவென்றால், ஜோதிமணிக்கு சீட் தர வேண்டாம் என்று திமுகவுக்கு உள்ளேயே பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதற்கு காரணம், 2 முறை நின்று தோற்று போய்விட்டார், அதுவும் அதே வேட்பாளரிடமே தோற்றிருக்கிறார், அதனால் சென்டிமென்ட் பார்த்து இந்த முறை ஜோதிமணி வேண்டாம் என்கிறதாம் திமுக.

அப்சரா
அத்துடன், ஜோதிமணிக்கு பதிலாக திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ஏன் சீட்டு தரக்கூடாது, புது முகம், தொகுதி மக்கள் மத்தியில் ஒரு புதுமை தெரியும், இவருக்கு சீட் கொடுத்தால் நன்றாக இருக்குமே.. அவரைதான் அந்த தொகுதியில் நிறுத்துவீர்கள் என்று நினைத்தோம்.. அதனால் அப்சராவுக்கே சீட் தரலாம் என்று ஒரு ஐடியாவையும் திமுகவே தந்துள்ளதாம்!

கலக்கம்
இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஜோதிமணிக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படின்னா இவ்வளவு நாளா தம்பிதுரைக்கு எதிராக ட்விட்டர் போர் நடத்தினது எல்லாம் வீணா? அத்தனையும் வீணா?? என்று ஜோதிமணியின் ஆதரவாளர்கள் புலம்பி வருகிறாராம்!
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications