A.R.Rahman Communal Row: யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை! விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பாக தான் தெரிவித்த கருத்துகளுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை என தெரிவித்துள்ளார்.

A R Rahman Communal Row

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: "அன்புள்ள நண்பர்களே! இசை எனது கலாச்சாரத்தை இணைத்து, கொண்டாடி, போற்றும் வழி. இந்தியா எனது உந்துசக்தி, குரு, வீடு. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.

ஆனால் என் நோக்கம் இசையின் மூலம் உயர்த்துவதும், கௌரவிப்பதும், சேவை செய்வதும் தான். நான் ஒருபோதும் வலியை ஏற்படுத்த விரும்பியது இல்லை, எனது நேர்மை உணரப்படும் என நம்புகிறேன். நான் யார் மனதையும் புண்படுத்த விரும்பியதில்லை.

இந்தியனாக இருப்பதில் தான் பெருமையடைவதாகவும், படைப்புச் சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை நாடு எனக்கு வழங்கியுள்ளது . சுதந்திரமான வெளிப்பாட்டிற்கு எப்போதும் இடமளித்து, பன்முக கலாச்சார குரல்களைக் கொண்டாடும் ஒரு சூழலை உருவாக்க உதவும். இந்தியனாக இருப்பதை நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+