பெண்களை கொன்னுடுவேன்.. பிறகு "உறவு" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி

அரக்கோணம் சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இறந்த சடலுங்களுடன் உல்லாசமாக இருக்கும் கொடூரன்- வீடியோ

    சென்னை: "பெண்களை அம்மிக்கல்லால்தான் கொலை செய்வேன்.. அவர்களை கொன்று விட்டு அந்த பிணத்துடனேயே உறவு வைத்து கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று சைக்கோ கொலையாளியின் கொடூரத்தின் மறுபக்கத்தை கண்டு அதிர்ந்துள்ளனர் போலீசார்!

    அரக்கோணத்தில், கடந்த ஜூலை 9-ம் தேதி, நிர்மலா என்ற பெண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இவர் எதனால் கொலை செய்யப்பட்டார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடந்து சரியாக 7-வது நாள், அதாவது ஜூலை 16-ம் தேதி, நிர்மலாவின் நெருங்கிய தோழியான இந்திராணி தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். அதனால் போலீசார் மிகவும் குழம்பி விட்டனர்.

    கைது

    கைது

    இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாளைக்கு முன்னாடிதான், ஆந்திரா எல்லையான நகரியில் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். சரோஜா என்பவரின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக ஆனந்த் கைது செய்யப்பட்டிருந்தார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அவரிடம் விசாரித்ததில் அரக்கோணத்தில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சொல்லவும், நகரி போலீசார் அரக்கோணம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்துதான் இரு மாநில போலீசாரும் ஆனந்தின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்தே போய்விட்டனர்.

    இந்திராணி

    இந்திராணி

    ஆனந்த சொன்னதாவது: "அரக்கோணத்தில் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். இந்திராணி என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது. இந்திராணிக்கு அவரது தோழியான நிர்மலாவுடன் சண்டை வந்தது. அதனால்தான் நிர்மலாவை கொல்ல வேண்டும் என்று என்னிடம் இந்திராணி சொல்லி கொண்டே இருந்தார். ஆனால் நான், நிர்மலாவை தனியாக சந்தித்து 2000 கொடுத்து, என்னுடன் ஜாலியாக இருக்க முடியுமா என்று கேட்டேன். அவர் என்னை பளார் என்று அறைந்துவிட்டார்.

    அம்மிக்கல்

    அம்மிக்கல்

    இதனால் எனக்கு ஆத்திரம் அதிகமானது. சம்பவத்தன்று நிர்மலா வீட்டுக்கு சென்று தலையில் அம்மி கல்லை போட்டு கொன்றேன். அந்த சடலத்துடன் உறவு கொண்டேன். ஆனால் நிர்மலா கொலை விஷயமாக இந்திராணியை போலீசார் விசாரணைக்காக துளைத்தெடுக்கவும், அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உடனே நான் நகரி பக்கம் தலைமறைவானேன். சரோஜா என்ற 55 வயது பெண்ணை கொன்றேன். அந்த சடலத்துடனும் உறவு கொண்டேன். பிறகு நகைகளை திருடி கொண்டு வந்துவிட்டேன்" என்று அதிர வைத்தார்.

    நெக்ரோஃபீலியா

    நெக்ரோஃபீலியா

    ஒரு பக்கம் சைக்கோ கொலையாளி என்றும், இன்னொரு பக்கம் நெக்ரோஃபீலியா என்ற நோயால் ஆனந்த் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிணத்துடன் உறவு கொள்ளவும், அதன் மூலம் இன்பம் அடைவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதுவரை எத்தனை பேரை ஆனந்த் கொன்றிருப்பார், உறவு கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது வாக்குமூலம் அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+