சட்டசபை இடைத்தேர்தலில் 71.62 % வாக்குப் பதிவு... தேர்தல் ஆணையம் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா, இல்லை தக்க வைக்குமா என்பதை தீர்மானிக்கும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக முடிவடைந்துள்ளது. இதில் 9 மணி நிலவரப்படி, மொத்தம் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முன்னதாக பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ, தற்போதைய சூழ்நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. தேர்தலின் போது எந்த சட்டஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்த அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்றார்.
1. பூந்தமல்லி- 79.14%
2. பெரம்பூர்- 61.06 %
3. திருப்போரூர்- 81.05 %
4. சோளிங்கர்- 79.63%
5. குடியாத்தம்- 81.79%
6. ஆம்பூர் - 76.35%
7. ஓசூர் - 71.29%
8. பாப்பிரெட்டிபட்டி - 83.31 %
9. அரூர் - 86.96%
10. நிலக்கோட்டை - 85.50%
11. தஞ்சாவூர் - 66.10 %
12. மானாமதுரை - 71.22%
13. ஆண்டிப்பட்டி - 75.19%
14. பெரியகுளம் -64.89%
15. சாத்தூர்- 60.87%
16. பரமக்குடி - 71.69%
17. விளாத்திகுளம்- 78.06%
18. திருவாரூர்-77.38 %
அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதமும், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications