ஊழலுக்கு துணை போனதாக சொல்லப்பட்ட கார்த்திகேயன் நெடுஞ்சாலைதுறை செயலாளரா? அறப்போர் இயக்கம் எதிர்ப்பு
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஊழலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன், தற்போது நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்த நெடுஞ்சாலைத்துறையில் ஊழலை ஒழிக்க நியமிக்கப்பட்டவர் தான் கார்த்திகேயன் IAS அவர்களா?
இவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களுடன் சேர்ந்து அவர் செய்தது என்ன? இவரை வைத்து தான் தமிழக அரசு ஊழல் இல்லாத, செட்டிங் டெண்டர் இல்லாத நிர்வாகத்தை கொடுக்க போகிறதா?
Corona பரவல் முடிந்த பிறகு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று சொன்னவர்கள் இவருடைய நியமனத்தை என்ன சொல்லி சமாளிக்க போகிறார்களோ!?
இவ்வாறு அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications