சென்னையில் லீசுக்கோ, வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வீடு தேடுறீங்களா.. இன்று போய் உடனே பாருங்க
சென்னை: சென்னையில் வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வீடு தேடுகிறீர்களா? சொந்தமாக வீடு வாங்க விரும்புகிறீர்களா? இன்று சென்று அந்த இடத்தைப் பாருங்கள். அங்கு தண்ணீர் தேங்கியுள்ளதா, வெள்ள வடிகால் சரியாக உள்ளதா, சாலைகள் எப்படி உள்ளது ஆகியவற்றை பார்க்கலாம்.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கம் என்று எடுத்துக்கொண்டால், தென்சென்னை பகுதிகள் மற்றும் தாம்பரம் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு இன்று அதிகாலை இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது.
இப்படி ஒரு மழை, கடந்த 1996ம் ஆண்டு பெய்தது. அப்போதும் ஒரே நாளில் 28 செமீ மழை பெய்தது. அதற்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக ஒரே நாளில் 16 செமீ மழை பெய்துள்ளது. சென்னை முழுவதுமே நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்க விரும்புவோர். வாடகைக்கு குடிபோக விரும்பும் ஏரியாக்கள்,லீசுக்கு போய் குடியேற விரும்புவோர் இன்று போய் அந்த பகுதியில் பாருங்கள்.

மழை நீர் தேங்கி உள்ளதா, மழை நீர் வடிகால் வசதிகள் உள்ளனவா, சாலைகள் எந்த அளவிற்கு மோசமாக உள்ளன. தண்ணீர்கள் குளம் போல் தேங்குமா, தண்ணீரால் பிரச்சனைகள் வேறுமா என்பதை பார்த்து அறிய முடியும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறிய மழைக்கே சாலைகள் வெள்ளம் போல் தேங்கிவிடும்.
இதற்கு காரணம் மழை நீர்வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான் காரணம். சில பகுதிகளில் தண்ணீர் போவதற்கு வடிகால்களே இருக்காது. மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போதுதான் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீருக்கு பள்ளமான பகுதிகள் மூழ்கும் எனவே சொந்த வீடு வாங்குவோர், வீடு மாற விரும்புவோர், இதுபோன்ற மழை காலங்களில் பார்த்தால் அந்த பகுதியின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.
அதேநேரம் தண்ணீரால் பிரச்சனை ஒருபுறம் எனில், தண்ணீர் வராமல் பிரச்சனை உள்ள ஏரியாக்களும் உள்ளன. பள்ளமான பகுதிகளில் வெள்ளக்காலங்களில் தண்ணீர் தேங்கும் என்றால், வெயில் காலங்களில் தண்ணீர் போர்வெல்களில் பிரச்சனை குறைவாக இருக்கும். ஆனால் மேட்டுப்பகுதிகளில் தண்ணீர் மழை காலங்களில் பிரச்சனை இருக்காது. ஆனால் வெயில் காலங்களில் போர்வெல்களில் தண்ணீரே வராது. இதனால் இதையும் வீடு வாங்குவோர் பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்னைக்கு தண்ணீரில் தான் கண்டம். சென்னையில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் பிரச்சனை, வராமல் போனாலும் பெரும் பிரச்சனை தான். காரணம் சென்னையில் உள்ள மக்கள் நெருக்கம் தான். பல ஏரிக்களும் குளங்களும் வீடுகள் கட்டுவதற்காக பாரபாட்சமே இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டன.
இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடிகால்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. அதன் விளைவுகள் மழை காலங்களில் மட்டுமே தெரியும். எனவே சொந்தமாக வீடு வாங்க விரும்புவோர் மழை காலங்களில் அந்த ஏரியாவிற்கு சென்று உண்மை நிலையை அறிந்து செயல்படுங்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications