கொலையாளிகளை உடனடியாக கைது பண்ணுங்க.. சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பைக்குகளில் வந்த மர்ம கும்பலால் இன்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்தவர். அங்கு புதிதாக வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

தினமும் இரவு பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீடு அருகே கட்சிக் காரர்களுடன் பேசுவது வழக்கமாம். அந்த வகையில், இன்று இரவு 7 மணியளவில் வழக்கம் போல நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் கொலையாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலனசில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
கொலையாளிகள் 6 பேரும் உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் கலர் டி-சர்டுகளை அணிந்து வந்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே ஆம்ஸ்ட்ராங்க் ஆதராவளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏறப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்ட்டது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் இட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications