Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலையாளிகளை உடனடியாக கைது பண்ணுங்க.. சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பைக்குகளில் வந்த மர்ம கும்பலால் இன்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்தவர். அங்கு புதிதாக வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

bahujan samaj party armstrong chennai murder

தினமும் இரவு பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீடு அருகே கட்சிக் காரர்களுடன் பேசுவது வழக்கமாம். அந்த வகையில், இன்று இரவு 7 மணியளவில் வழக்கம் போல நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் கொலையாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலனசில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

கொலையாளிகள் 6 பேரும் உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் கலர் டி-சர்டுகளை அணிந்து வந்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே ஆம்ஸ்ட்ராங்க் ஆதராவளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏறப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்ட்டது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் இட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+