கொலையாளிகளை உடனடியாக கைது பண்ணுங்க.. சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பைக்குகளில் வந்த மர்ம கும்பலால் இன்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவை சேர்ந்தவர். அங்கு புதிதாக வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

தினமும் இரவு பெரம்பூரில் புதிதாக கட்டி வரும் வீடு அருகே கட்சிக் காரர்களுடன் பேசுவது வழக்கமாம். அந்த வகையில், இன்று இரவு 7 மணியளவில் வழக்கம் போல நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் கொலையாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலனசில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
கொலையாளிகள் 6 பேரும் உணவு டெலிவரி ஊழியர்கள் அணியும் கலர் டி-சர்டுகளை அணிந்து வந்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி மருத்துவமனை எதிரே ஆம்ஸ்ட்ராங்க் ஆதராவளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏறப்பட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்ப்ட்டது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் இட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications