ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து, குடிநீர் எடுத்து வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், வாட்டி வதைத்த கோடை வெயிலின் காரணமாகவும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சுமார் 1 கோடிக்கும் மேல் மக்கள் வசித்து வரும் தலைநகரில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய தேவைளுக்கு கூட நீரின்றி மக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமான உணவகங்கள் தண்ணீர் பிரச்சனை காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் தண்ணீர் பிரச்சனை ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த திட்டத்திற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு வேகன்களில் குடிநீர் எடுத்து செல்வது தொடர்பாக அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில்வே மற்றும் அரசு இணைந்து செயல்பட்டு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் குடிநீரை சென்னைக்கு எடுத்து செல்வது எப்படி என ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, தெற்கு ரயில்வேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் தமிழக அரசின் ஆலோசனை அடிப்படையில் தினந்தோறும், 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு தினந்தோறும் குடி தண்ணீரை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் முயற்சி மற்றும் திட்டத்திற்கு, தெற்கு ரயில்வே ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் குடிநீரை கொண்டு வருவதற்கு தேவையான வேகன்களை ஏற்பாடு செய்து தந்து உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்க கூடிய குடிநீரை எடுத்து, ரயில் மூலம் சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு வந்து அங்கிருக்க கூடிய குடிநீர் தொட்டியில் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தண்ணீரை கொண்டு வருவதற்கான வேகன்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications