ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: தலைநகர் சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து, குடிநீர் எடுத்து வரும் திட்டம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், வாட்டி வதைத்த கோடை வெயிலின் காரணமாகவும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சுமார் 1 கோடிக்கும் மேல் மக்கள் வசித்து வரும் தலைநகரில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய தேவைளுக்கு கூட நீரின்றி மக்கள் அல்லாடி வருகின்றனர். ஏராளமான உணவகங்கள் தண்ணீர் பிரச்சனை காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் தண்ணீர் பிரச்சனை ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த திட்டத்திற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து, சென்னைக்கு வேகன்களில் குடிநீர் எடுத்து செல்வது தொடர்பாக அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர்.
ரயில்வே மற்றும் அரசு இணைந்து செயல்பட்டு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் குடிநீரை சென்னைக்கு எடுத்து செல்வது எப்படி என ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, தெற்கு ரயில்வேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் தமிழக அரசின் ஆலோசனை அடிப்படையில் தினந்தோறும், 10 மில்லியன் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு தினந்தோறும் குடி தண்ணீரை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் முயற்சி மற்றும் திட்டத்திற்கு, தெற்கு ரயில்வே ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் குடிநீரை கொண்டு வருவதற்கு தேவையான வேகன்களை ஏற்பாடு செய்து தந்து உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்க கூடிய குடிநீரை எடுத்து, ரயில் மூலம் சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு வந்து அங்கிருக்க கூடிய குடிநீர் தொட்டியில் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தண்ணீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தண்ணீரை கொண்டு வருவதற்கான வேகன்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications