பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற ஐஜி முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் முருகன். இவர் ஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2017 - 18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றினார்.

அப்போது அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது முருகன், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் பெண் எஸ்பி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிசிஐடி வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் முருகன் மீது பெண்கள் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. ஆனால் வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து முன்னேற்றம் அடையாமல் இருந்தது. இதனால் முருகனை காப்பாற்றும் முயற்சி நடப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவியிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டது. ஆளுநர் ஆர்என் ரவியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு சிபிசிஐடி சார்பில் முருகன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் முருகன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் ஓய்வு பெற்ற ஐஜியான முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் முருகன் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications