''MeToo'' புகார்களை விசாரிக்க தனி குழு.. விரைந்து நடவடிக்கை.. விஷால் அறிவிப்பு!
''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் சினிமா துறை தொடர்பான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் சினிமா துறை தொடர்பான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரும், தமிழ் சினிமாவில் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் நடிகைகளுக்கு உறுதுணையாக நடிகர் சங்கம் இருக்கும் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை புகார்களாக அளிக்களாம். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தைரியமாக நடிகைகள் புகார் அளிக்கலாம்.
இதுகுறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்று பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
சின்மயி புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் புகார் கொடுக்கும் பட்சத்தில் வைரமுத்து மீதான புகாரை விசாரிப்போம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.