ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே சுரேஷ் போட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தனது 8 வங்கி கணக்குகளை முடக்கிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நடிகர் ஆர் கே சுரேஷின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி ஆர் கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,400 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த மோசடி வழக்கின் விசாரணையின் போது, பாஜக நிர்வாகியும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே சுரேசுக்கு சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆர் கே சுரேஷின் 8 வங்கி கணக்குகளை முடக்கம் செய்து பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வங்கி கணக்குகளை முடக்கம் செய்த நடவடிக்கையை எதிர்த்து நிதி நிறுவன வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர் கே சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 8 லட்சம் ரூபாய் டெப்பாசி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கி கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி ஆர் கே சுரேஷ் தரப்பில் இருந்து ரூ.8 லட்சம் ரூபாய் டெப்பாசிட் செய்யப்பட்டது. இருப்பினும் வங்கி கணக்கு நீக்க நடவடிக்கையை எடுக்கவில்லை என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக ஆர்கே சுரேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனு நிதி நிறுவன வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில், இந்த வங்கி கணக்குகள் மீதான முடக்கமானது மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் வேண்டும் என்றே கால தாமதம் செய்துள்ளது என்று அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான காலக்கெடுவுக்குள் வங்கி கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, இது நீதிமன்ற அவமதிப்பாக வராது என்று உத்தரவிட்டு ஆர் கே சுரேஷ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications