இந்த முறை தப்புமா தாம்பரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு.! அதிரடி ஆய்வு
சென்னை: வடகிழக்கு பருவு மழை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாகக் களத்தில் இறங்கி உள்ளார்.
ஒவ்வொரு முறையும் மழைக் காலம் தொடங்கினாலே, அது சென்னைவாசிகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். சிறிய மழைக்கே சென்னை சாலைகள் குளங்களாகிவிடும்.
பல ஆண்டுகளாகவே சென்னையில் இதே நிலை தான் இருந்து வந்தது. இருப்பினும் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

சென்னை மழை
இதன் காரணமாகவே மழைக் காலம் என்றால் சென்னைவாசிகளுக்கு அது ஒரு அலர்ஜியாகவே மாறிவிட்டது. அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் சென்னை அதிக மழையைப் பெறும். இந்த காலத்தை எப்படியாவது கடந்த விட வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் கனவாக இருக்கும். கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக மழைநீர் வடிகால் வாரிய பிரச்சினையைச் சரி செய்வோம் என அறிவித்தது.

வடிகால் பணிகள்
இருப்பினும், கடந்தாண்டு அதேபோல தண்ணீர் தேங்கவே செய்தது. ஆட்சிக்கு வந்த பிறகு சில மாதங்களே இருப்பதால், இந்த பிரச்சினை என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இன்று பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இன்னும் கூட சில இடங்களில் பணிகள் நிறைவடையவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

தாம்பரம்
பொதுவாக பருவமழை காலங்களில் நகர்ப்பகுதிகளைக் காட்டிலும் புறநகரான தாம்பரத்தில் தான் பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இந்தச் சூழலில் தாம்பரம் மாநகராட்சி பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வு
பம்மல் பகுதியில் ஒரு கோடி 25 லட்சம் செலவில் நடைபெறும் நடவாய் ஓடை வடிகால் பணிகள் அனகாபுத்தூர் மேட்டுத் தெருவில் நான்கு கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார் அடையாறு ஆறு செல்லும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளைப் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும்

இறையன்பு
மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இந்தாண்டு மழை நீர் எந்தளவுக்குத் தேங்கும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சென்னைவாசிகள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications