காவி சர்ச்சைக்கு நடுவே.. வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு நிறம் ஏன்? பின்னணியை விளக்கிய அஸ்வினி வைஷ்ணவ்!
சென்னை: வந்தே பாரத் ரயிலின் நிறம் வெள்ளையில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இது பார்க்க காவி நிறமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வந்தே பாரத் ரயில் பெட்டி ஆரஞ்சு நிறமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் தேசியக்கொடி இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐசிஎப்பில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது வந்தே பாரத் ரயில் வெள்ளை நிறத்தில் இயங்கி வருகிறது. இதில் சில இடங்களில் நீலநிறம் உள்ளது. இதற்கிடையே தான் வந்தே பாரத் ரயிலின் நிறம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெள்ளை நிறத்தில் ரயில் இயக்கப்படுவதாக விரைவில் அழுக்காகி விடுகிறது. இதனால் ரயிலின் நிறத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதன்படி வந்தே பாரத் ரயிலை ஆரஞ்சு நிறத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில இடங்களில் மட்டும் கிரே கலர் இடம்பெற உள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின.
இதனை பார்த்த பலரும் வந்தே பாரத் ரயிலுக்கும் காவி நிறத்தை மத்திய பாஜக அரசு பூசுவதாக குற்றம்சாட்டினர். இதற்கிடையே தான் ஆரஞ்சு மற்றும் கிரே வண்ணத்தில் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் நிறமாற்றம் குறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛வந்தே பாரத் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. தேசியக்கொடியின் தாக்கத்தினால் தான் ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலில் பல்வேறு விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இது செயல்படுத்தப்படும்'' என்றார்.
அதாவது நம்நாட்டின் தேசியக்கொடியின் முதல் நிறமாக இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். இதனை டீப் சப்ரான், கேசரி, காவி எனவும் கூறுகிறார்கள். அந்த வண்ணத்தை தழுவி தான் வந்தே பாரத் ரயிலுக்கு ஆரஞ்சு நிறத்தில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications