நாளை முதல் 4 நாட்களுக்கு சட்டசபைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. நாளை தமிழ்நாடு சட்டசபை கூடவுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்காக இன்று ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. தமிழ்நாடு சட்டசபையைப் பொறுத்தவரை 2025 ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை பட்ஜெட் விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கை நிகழ்வுகள் சட்டமன்றத்தில் நடைபெற்றன.

ஆய்வு குழு கூட்டம்
அந்த நிகழ்வுகளுக்கு பிறகு சட்டமன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சுமார் 6 மாதங்களை எட்டும் நிலையில் அக்டோபர் 14 ஆம் தேதி (நாளை) சட்டமன்றம் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனையொட்டி அப்பாவு தலைமையில் பேரவை அலுவல் சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் சட்டசபை கூட்டத் தொடர் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு கூட்டத்தை நடத்துவது, கூட்டத்தை எப்படி திட்டமிடுவது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு அப்பாவு வெளியிட்டுள்ளார்.
சட்டசபை நிகழ்வு
நாளை முதல் நாள் கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 மக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து அஞ்சலி செலுத்துவது, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேர், வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிப்பது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாள் கூட்டத்திற்கு பிறகு தான் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் சட்டமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாளை சட்டசபை கூடுகிறது
கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அக்டோபர் 14 ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. 4 நாள்கள் சட்ட சபை கூட்டத் தொடர் நடைபெறும். நாளை மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கரூர் துயரம் தொடர்பாகவும் நாளை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அக்டோபர் 15 ஆம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை முன்வைக்கப்படும். அக்டோப் 17 ஆம் தேதி வரை மானியக் கோரிக்கைகளை மீதான விவாதம் நடைபெறும் என்று கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications