தீபாவளி வந்தாச்சு.. செலவுக்கு பணம் எடுக்க ஏடிஎம் போனா பணம் இல்லை..மக்கள் அல்லல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இது மட்டுமல்லாமல் ஊர்களுக்கு செல்லவும் பேருந்து, ரயில்களில் கூட்டம் கண்ணை கட்டுகிறது. சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.

ஏடிஎம் மையம்

ஏடிஎம் மையம்

இந்நிலையில் தீபாவளி செலவுக்காக காசு எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இல்லை.

மக்கள் அவதி

மக்கள் அவதி

இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இங்கு மட்டுமில்லை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஊருக்கு செல்லும் மக்கள் அவதியுறுகின்றனர்.

வழியில்லை

வழியில்லை

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகையில், துணி மணிகளை கூட கார்டை ஸ்வைப் செய்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஊருக்கு செல்ல பேருந்து கட்டணத்துக்கு என்ன செய்வது. கறி கடைகளிலும் பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லையே என கூறுகின்றனர்.

பணம் எடுத்தால்...

பணம் எடுத்தால்...

இன்னும் சிலரிடம் கேட்டபோது இதுபோல் பிரச்சினை வரும் என தெரிந்ததால் நாங்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே பணத்தை எடுத்து வைத்துவிட்டோம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+