ATM Rule: ஏடிஎம் விதிகளில் முக்கிய மாற்றம்.. ஏப்.1 முதல்! இந்த விஷயங்களை தெரியாமல் பணம் எடுக்காதீங்க
சென்னை: வரும் ஏப்ரல் 1 புதிய நிதியாண்டு முதல் நிதி சார்ந்த விஷயங்களில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. அந்த வகையில் ஏடிஎம் விதிகளில் முக்கிய மாற்றங்களை எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் கொண்டு வர இருக்கின்றன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நகர்ப் புறங்களில் ஏடிஎம் பயன்பாடு குறைந்து யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், கிராமப்புறங்களில் ஏடிஎம்களின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம்களையே பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் விதிகளில் வங்கிகள் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

5 முறை மட்டுமே இலவசம்
ஏடிஎம் இயந்திரங்களில் டெபிட் கார்டு பயன்படுத்தாமல் யுபிஐ பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையும் இனி மாதாந்திர கட்டண முறையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கணக்கு வைத்து இருக்கும் வங்கி ஏடிம்களில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள், பிற வங்கி ஏடிஎம்கள் என்றால் மெட்ரோ நகரங்களில் 3 பரிவர்த்தனைகளும் சிறு நகரங்கள் என்றால் 5 பரிவர்த்தனைகளும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.
அதன்பிறகு மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எப்.சி தெரிவித்துள்ளது. தற்போது வரை ஹெச்.டி.எப்.சி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ வழியாக ஏடிஎம்களில் பணம் எடுப்பதை தனி கேட்டகரியில் வங்கி நிர்வாகம் வைத்து இருந்தது. வரும் புதிய நிதியாண்டு முதல் இந்த கட்டண வரம்புக்குள் யுபிஐ அடிப்படையிலான ஏடிஎம் பரிவர்த்தனையும் கொண்டு வரப்பட உள்ளது.
எதெற்கெல்லாம் கட்டணம்?
வரும் ஏப். 1 முதல் இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு பேலன்ஸ் பார்ப்பது, மினி ஸ்டேட்மண்ட் எடுப்பது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு முறையும் ரூ.8.50 முதல் 12 ரூபாய் வரை கட்ணம் வசூலிக்கபடும். இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு பேலன்ஸ் இல்லாமல் ரத்து ஆகும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 முதல் 25 வரை வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கிகளில் 10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் ஓடிபியை பதிவிடுவது செய்வது அவசியம். யுபிஐ அடிப்படையிலான மாதாந்திர பண பரிவர்த்தனை ஐந்து முறை இலவசம் ஆகும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் டெபிட் கார்டு வகையை பொறுத்து ஒரு நாளைக்கு ரூ.75 ஆயிரம் வரை எடுக்கலாம்.
வங்கி கணக்குகளின் டெபிட் கார்டு வகைகளை பொறுத்து கட்டணங்கள் விதிகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை ரூ.1 லட்சம் வரையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
இதுபோக ஜியோ பேமண்ட்ஸ் வங்கியும் கியூஆர் கோடு அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், யுபிஐ கியூஆர் கோடை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும். வங்கி பரிவர்த்தனைகள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. வங்கி பக்கமே போகாமல் பண பரிவர்த்தனையை செய்யும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன.
சிடிஎம் மெஷின் மூலமாக அக்கவுண்டில் பணம் செலுத்துவது, ஏடிஎம் வாயிலாகவே பணத்தை எடுக்கும் முடியும். இந்த பழக்கம் கூட மக்களிடையே குறைய தொடங்கிவிட்டது. யுபிஐ, இணைய வழி பரிவர்த்தனை வழியாகவே பெரும்பாலும் நடைபெறுகிறது. இருந்தாலும் கிராமப்புறங்களில் ஏடிஎம் அடிப்படையிலான பரிவர்த்தனை அதிகமாக இருப்பதால் வங்கிகள் கொண்டு வந்து இருக்கும் இந்த மாற்றம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?














Click it and Unblock the Notifications