Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சூரியன் சுடும் கவனம்..தென் மாவட்டங்களில் ஜில் மழை..வானிலையின் கூல் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் மார்ச் 4ஆம் தேதியும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

தமிழ்நாட்டில் கோடை காலம் முன் கூட்டியே ஆரம்பித்து விட்டது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Attention to the sun shining in Chennai - Rain in southern districts says Met office

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, கோவை, தருமபுரி, கரூர், திண்டுக்கல், மதுரை, கடலூர், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்கள், மற்றும் காரைக்காலில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்றும், மார்ச் 4ஆம் தேதியும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மார்ச் 2,3,5ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும்.

மார்ச் 4, 5ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+