உள்ளே அழுகிறேன்! வெளியே சிரிக்கிறேன்! மனம் உடைந்து போன நாசர்! சீனியர் அமைச்சர்கள் தரும் நம்பிக்கை!
சென்னை: அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாசர் மனம் உடைந்த நிலையில் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வருகிறாராம்.
அமைச்சர் பதவியிலிருந்து ஸ்டாலின் தன்னை நீக்குவார் என சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியான போது கூட அதை நாசர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வில்லையாம்.
ஸ்டாலின் மீது அப்படியொரு நம்பிக்கை வைத்திருந்த நாசருக்கு நேற்று நடந்த நிகழ்வு தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறது.
என் சோகம் என்னோடு தான் என்பதற்கேற்ப மனதுக்குள் கவலையும், அழுகையும் வந்தாலும் தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள், பிரமுகர்கள் மத்தியில் நாசர் சிரித்து பேசி அனுப்பி வைக்கிறாராம்.

தன்னை பொறுத்தவரை அமைச்சர் பதவி போனால் என்ன, கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி இருக்கிறதே அது போதும் என பெருமையாக கருதும் நாசர், அடுத்த மூன்றாண்டுகளில் மீண்டும் முதல்வர் தனக்கொரு வாய்ப்பு தருவார் என நம்புகிறாராம்.
ஏனெனில் ஸ்டாலினுக்கும் நாசருக்கும் இடையேயான நட்பு என்பது இன்று நேற்றல்ல ஏறத்தாழ 30 ஆண்டுகால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞரணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்த மூன்று பேரில் நாசரும் ஒருவர்.
அந்தளவுக்கு திமுகவில் படிப்படியாக முன்னேறி அமைச்சரானவர் நாசர். அவருக்கு இருக்கும் பெரிய மைனஸ் என்று பார்த்தால் முன் கோபம். இந்த முன் கோபத்தால் தான் இன்று அமைச்சர் பதவியை இழக்க வேண்டிய நிலை அவருக்கு வந்துள்ளது.
இதனிடையே சீனியர் அமைச்சர்கள் பலரும் நாசரை நேற்றிரவு முதல் தொடர்பு கொண்டு பேசி நம்பிக்கை அளித்து வருகிறார்களாம். இதுவும் கடந்து போகும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொள்ளும் நாசர், ஆதரவாளர்களை சமாதானம் செய்ய முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications